follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுதேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Published on

இன்று (09) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று இடம்பெற்றதுடன், விவாதத்தை அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் சட்டமூலத்துக்கு வாக்கெடுப்புக் கோரினார்.

அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் வழங்கப்பட்டன. இதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் குழுநிலையின் போது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கமைய, சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலமும் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...