சீரற்ற காலநிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று முதல் எதிர்வரும், 16ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகள் மற்றும் பாதிப்புகளை கருத்திற் கொண்டு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசனைக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.