நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.