புனானை மற்றும் வாழைச்சேனை ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று (11) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவுநேர தபால் ரயில், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயிலையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாளை(12) காலை 06.05 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இயக்கப்படும் உதயதேவி விரைவு ரயிலையும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் ரயிலையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.