வெள்ளம் காரணமாக நேற்று (11) இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகள் இன்று (12) மாலை முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக நேற்று இரத்து செய்யப்பட்ட மீனகயா எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புமென ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.