இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று(12) திறந்து வைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பாலம், 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமைகளை இது பெற்றுள்ளது.
இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.