follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமாதிவெல வீட்டுத்தொகுதியில் பாதிக்கும் பாதி பேர் வெளியாட்கள்

மாதிவெல வீட்டுத்தொகுதியில் பாதிக்கும் பாதி பேர் வெளியாட்கள்

Published on

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மாதிவெல வீட்டுத்தொகுதியில் பாதி பேர் எம்.பி.க்கள் அல்ல என்றும் வெளியாட்கள் என்றும் சமீபத்திய விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெலயில் பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிப்பதற்கு அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுகின்றது.

அந்த வீடுகளை வெளியாட்களுக்கு கொடுக்க வேண்டாம் என பலமுறை எம்பிக்களுக்கு அறிவித்தல் கொடுத்தாலும் பலனில்லை என்றும் பழையபடியே நடைபெறுவதாகவும் தெரியவருகிறது.

எம்.பி.க்களின் சம்மதத்துடன் இருப்பதால் இவ்வாறு வெளியாட்களை நீக்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கிடையில், எம்.பி.களின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியை நடத்துவதற்கான செலவும் இரட்டிப்பாகியுள்ளதாக தெரியவருகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...