follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுமலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

Published on

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (16) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நானுஓயாவிலிருந்து நேற்று (15) கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட ரயில் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் தடம்புரண்ட இடத்திற்கு சமீபமாக ரயில் தடம்புரண்டதன் காரணமாக நேற்று 3.00 மணி முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் தடைப்பட்டன.

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கு வருகை தந்த பயணிகள் தலவாக்கலை ரயில் நிலையத்திலிருந்து பஸ்களின் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படிருந்தன.

இதனால் மலையக பகுதிகளுக்கு வருகை தந்திருந்து பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

நேற்று ரயில் தடம்புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான மூன்று ரயில் சேவைகள் இரத்தச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக பல தடவைகள் ரயில்கள் தடம் புரள்வு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...