follow the truth

follow the truth

May, 29, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகரட் சாக்குகளை பாதுகாக்க காவலர்கள்

கரட் சாக்குகளை பாதுகாக்க காவலர்கள்

Published on

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கெரட் சாக்குகளை பாதுகாக்க வியாபாரிகள் பணம் கொடுத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றன.

கேரட் சாக்குகளை பாதுகாக்கும் காவலாளி ஒருவருக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்த வர்த்தகர் ஒருவர் கூறுகிறார்.

மேலும் சில பொருளாதார மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் கேரட் சாக்குகளை திருடும் கும்பல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஒரு கிலோ கேரட் மொத்த விலையில் 1800 முதல் 2300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், அன்றாடம் பொருளாதார மையங்களுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஏப்ரல் முதல் வாரத்தில் கேரட் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

கட்டில் இல்லை, உடைகள் இல்லை, உண்ண உணவில்லை.. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதான் பிரிட்டிஷ் பெண்

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம்,...