follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டு04வது போட்டியிலும் மண்ணை கவ்வியது பாகிஸ்தான்

04வது போட்டியிலும் மண்ணை கவ்வியது பாகிஸ்தான்

Published on

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் 04 ஆவது போட்டி இன்று நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்ககளை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. அணி சார்பில் முஹம்மது ரிஸ்வான் 90 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 03 விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணிக்காக டார்லி மிச்சல் 72 ஓட்டங்களையும் கிளென் பிலிப்ஸ் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனால் போட்டித்தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தானின் தொடர் தோல்விகள் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...