நாட்டின் பொருளாதாரத்தின் IMF இனது கருத்து

634

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர், இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து வருகின்ற போதிலும், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை இன்னும் பெரிய அளவில் மக்களை சென்றடையவில்லை என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அரசாங்க வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கு சொத்து வரி இலங்கைக்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்ததுடன், அங்கு ஒரு வார காலம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் முதலாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கிய பின்னர், அதிகாரிகள் குழு பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறையை ஆய்வு செய்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here