follow the truth

follow the truth

May, 20, 2024
Homeவணிகம்மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான கதையின் உண்மை இதுதான்!

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான கதையின் உண்மை இதுதான்!

Published on

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் இந்த நாட்களில் பேசப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (கொள்கைகள்) ஏ.யு.எல்.ஏ.அன்சார் மற்றும் மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தொழில்முனைவோர் வங்கியியல்) விக்கிரம நாராயண ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்திருந்தனர்.

கடன் பெறும்போது ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார்கள் என்றும், கடனை செலுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில கடனாளிகள் வந்து வங்கியில் பேசி மீண்டும் கால அட்டவணையை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடனை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...