கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதும் யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.