2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றம் தொடர்பில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் எவரேனும் அதிருப்தியடைந்திருந்தால், நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு தமது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அந்த மேன்முறையீடுகள் தொடர்பில் நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபையின் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை குறித்த இடமாற்றங்கள், வழங்கப்பட்டுள்ள விதத்திலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.