வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இரத்து

577

நாளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாத சம்பளத்துடன் கூடிய DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய கடிதத்தை இரத்து செய்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அத்துடன், ஜனவரி மாதத்திற்கான வழமையான சம்பளப் பட்டியலின் ஊடாக DAT கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாத வைத்தியர்களுக்கு விசேட வவுச்சர் மூலம் உரிய கொடுப்பனவை வழங்குமாறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here