follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP3என்னுடைய வீட்டில் தங்க குதிரைகள் இல்லை

என்னுடைய வீட்டில் தங்க குதிரைகள் இல்லை

Published on

தனது மூத்த மகள் வீட்டில் தங்க குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, அந்த வீட்டில் இருந்து பால் பாக்கெட்டுகள் போன்ற சில உணவுகளையும்
பானங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தங்கக் குதிரைகள் என அந்த வீட்டில் எதுவும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் செய்தித்தாள் வாசிப்பாளர் ஒருவர் தனது மகளின் வீட்டில் திருடப்பட்டுள்ளமை குறித்து மிக அநாகரீகமாக செய்தியினை விவரித்திருந்தார்.

அரச தலைவர் ஒருவருக்கு பரிசில்கள் வழங்கினால், அதனை மகளின் வீட்டில் வைப்பது சரியா எனக் கேட்டிருந்தார்.

கத்தார் விஜயத்தின் போது என்னைப் பாதுகாக்கச் சென்றவர்களுக்கு அந்நாட்டுத் தலைவர் சுமார் பத்து இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை வழங்கினார்.

எனக்கு அதிகாரப்பூர்வமாக தருவதை தந்தார்கள். நான் ஜனாதிபதியாக இருந்தபோது கிடைத்த பரிசுகள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் உள்ளன. எனக்கு கிடைத்த பொருட்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு அறை உள்ளது. அந்த பரிசுகளை முந்தைய ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...