follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP3என்னுடைய வீட்டில் தங்க குதிரைகள் இல்லை

என்னுடைய வீட்டில் தங்க குதிரைகள் இல்லை

Published on

தனது மூத்த மகள் வீட்டில் தங்க குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, அந்த வீட்டில் இருந்து பால் பாக்கெட்டுகள் போன்ற சில உணவுகளையும்
பானங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தங்கக் குதிரைகள் என அந்த வீட்டில் எதுவும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் செய்தித்தாள் வாசிப்பாளர் ஒருவர் தனது மகளின் வீட்டில் திருடப்பட்டுள்ளமை குறித்து மிக அநாகரீகமாக செய்தியினை விவரித்திருந்தார்.

அரச தலைவர் ஒருவருக்கு பரிசில்கள் வழங்கினால், அதனை மகளின் வீட்டில் வைப்பது சரியா எனக் கேட்டிருந்தார்.

கத்தார் விஜயத்தின் போது என்னைப் பாதுகாக்கச் சென்றவர்களுக்கு அந்நாட்டுத் தலைவர் சுமார் பத்து இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை வழங்கினார்.

எனக்கு அதிகாரப்பூர்வமாக தருவதை தந்தார்கள். நான் ஜனாதிபதியாக இருந்தபோது கிடைத்த பரிசுகள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் உள்ளன. எனக்கு கிடைத்த பொருட்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு அறை உள்ளது. அந்த பரிசுகளை முந்தைய ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...