கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத கடவை திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 7ஆம் திகதி காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை பகுதியளவிலும், அன்றைய தினம் இரவு 10.30 மணி வரையிலும் முழுமையாக மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முழுமையாக மூடப்படும் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.