follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉள்நாடுஅரசு ஊழியர்களுக்கு மின்சார கார்கள், மின்சார மோட்டார் சைக்கிள்?

அரசு ஊழியர்களுக்கு மின்சார கார்கள், மின்சார மோட்டார் சைக்கிள்?

Published on

இலங்கை – சீன வர்த்தக முதலீட்டுத் திட்டத்தின் “எக்ஸ்ஃபோ மாத்தலே”யின் கீழ் சீனத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பின்படி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் தரோஹன திஸாநாயக்க அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு, இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் பல பயனுள்ள முதலீடுகளுக்காக பல முன்னணி சீன வர்த்தகர்களுடன் சில ஆரம்ப கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை எதிர்கொள்ளும் கடினமான பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணம் வழங்கும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முதலீட்டு திட்டங்கள் அவை.

அரசாங்க ஊழியர்களின் நோக்கத்திற்காக மின்சார கார்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் அத்துடன் வர்த்தக சூழலின் அடிப்படையில் இலங்கைக்கு முச்சக்கர வண்டிகள், இலகுரக லொறிகளை கொண்டு வருதல் அல்லது இலங்கையில் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

விவசாய பொருளாதாரத்தை சீரமைக்க நவீன தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சோலார் பேனல்கள் நிறுவுதல் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட்டதுடன், பல சீன வர்த்தகர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27)...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...