கொழும்பில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட CCTV கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 675 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் CCTV மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.