follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுஉரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்க திட்டம்

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்க திட்டம்

Published on

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், இதன்மூலம் பெறப்படும் பணம், குறித்த வழக்குடன் தொடர்புடைய கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வழக்கு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த வழக்கு பொருளுக்கு உரிய நபர் வழக்கில் வெற்றி பெற்றால் அந்த பணம் குறித்த நபருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவர் வழக்கில் தோல்வியடைந்தால் அதனை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வழக்கு விசாரணைகளுக்காக நீண்ட காலம் செலவிடப்படுகின்ற காரணத்தினால், பெரும்பாலான வழக்கு பொருட்கள் அழிவடைகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான சட்டத்திருத்தம் விரைவில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...