follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1இன்று சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

இன்று சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

Published on

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில், வைத்தியர்களுக்கான DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வுகளை எட்டுவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலை 6.30 மணி முதல் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அகில இலங்கை தாதியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது என அதன் தலைவர் ரவீந்திர கஹடவராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய பணிப்புறக்கணிப்பு நியாயமான காரணத்துக்கான பணிப்புறக்கணிப்பு அல்ல என ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டிய சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...