follow the truth

follow the truth

August, 2, 2025
Homeஉள்நாடுயுக்திய நடவடிக்கை - 703 சந்தேக நபர்கள் கைது

யுக்திய நடவடிக்கை – 703 சந்தேக நபர்கள் கைது

Published on

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 178 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 204 கிராம் ஹெராயின், 118 கிராம் ஐஸ், 03 கிலோ 100 கிராம் கஞ்சா, 2,840 கஞ்சா செடிகள், 03 கிலோ 190 கிராம் மாவா, 77 கிராம் மதன மோதகம், 477 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 178 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 11 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பெற்ற 156 பேரும் உள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...