நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 178 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 204 கிராம் ஹெராயின், 118 கிராம் ஐஸ், 03 கிலோ 100 கிராம் கஞ்சா, 2,840 கஞ்சா செடிகள், 03 கிலோ 190 கிராம் மாவா, 77 கிராம் மதன மோதகம், 477 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 178 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 11 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பெற்ற 156 பேரும் உள்ளனர்.