ஒதுக்கப்பட்டிருந்த அதிசொகுசு பேருந்துகள் மீண்டும் சேவையில்

274

இலங்கை போக்குவரத்து சபையினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 அதிசொகுசு பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரத்மலானை வளாகத்தில் புனரமைக்கப்பட்ட இப்பேருந்துகளின் திருத்தப்பணிகளுக்கு பத்து மில்லியன் ரூபாவிற்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்தப் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் ஒரு பேருந்தின் மூலம் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபா வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here