இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் வீதிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக மேலும் 4,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.