புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள கைதிகள் தொடர்ந்தும் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அந்த நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தினுள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்று பிரவேசித்துள்ளமையால் அங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படும் குழப்ப நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.