follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு50 நாட்களுக்குள் 56,541 சந்தேகநபர்கள் கைது

50 நாட்களுக்குள் 56,541 சந்தேகநபர்கள் கைது

Published on

யுக்திய சுற்றிவளைப்பு ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் 56,541 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 49,558 சந்தேகநபர்களும், குற்றப்பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6,983 சந்தேகநபர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் போது 142 கிலோ 541 கிராம் ஹெரோயின், 208 கிலோ 290 கிராம் ஐஸ், 974 கிலோ 605 கிராம் கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருட்கள் பாதுகாப்பு தரப்பினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 1817 பேர் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 1,981 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...