வரக்காபொல பிரதேசத்தில் மறைந்திருந்த போது யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “குடு ரொஷான்” மற்றும் அவரது இளைய சகோதரரும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்போது, குடு ரொஷானுக்கு 3 கோடி ரூபா ரொக்கப் பிணையாகவும், மற்றைய சந்தேக நபருக்கு 50 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையாகவும் நீதிமன்றம் நிர்ணயித்தது.
மேலும், “குடு ரொஷானுக்கு’ தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 7 சரீர பிணைகளும் அவரது சகோதரருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளும் நிர்ணயிக்கப்பட்டது.