follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு2023ம் ஆண்டுக்கான வட்டியை செலுத்தத் தயார் - மின்சார சபை

2023ம் ஆண்டுக்கான வட்டியை செலுத்தத் தயார் – மின்சார சபை

Published on

புதிய மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக நுகர்வோரிடமிருந்து இலங்கை மின்சார சபை சேகரிக்கும் வைப்புத்தொகைக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வட்டியை செலுத்தத் தயார் என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (13) மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

​​இலங்கை மின்சார சபை சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், மின்சார இணைப்புக்களுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத்தொகைக்கு 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த வட்டியாக 11.67 வீதத்தை செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மின்சார சபை இந்த வட்டியை செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...