follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு2023ம் ஆண்டுக்கான வட்டியை செலுத்தத் தயார் - மின்சார சபை

2023ம் ஆண்டுக்கான வட்டியை செலுத்தத் தயார் – மின்சார சபை

Published on

புதிய மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக நுகர்வோரிடமிருந்து இலங்கை மின்சார சபை சேகரிக்கும் வைப்புத்தொகைக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வட்டியை செலுத்தத் தயார் என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (13) மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

​​இலங்கை மின்சார சபை சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், மின்சார இணைப்புக்களுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத்தொகைக்கு 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த வட்டியாக 11.67 வீதத்தை செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மின்சார சபை இந்த வட்டியை செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...