follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுகந்தானையில் சுற்றித்திரிந்த பெண் - பொலிசாரின் அறிவிப்பு

கந்தானையில் சுற்றித்திரிந்த பெண் – பொலிசாரின் அறிவிப்பு

Published on

அண்மையில் கந்தானை பிரதேசத்தில் ‘அன்னை மரியாள்’ போன்ற ஆடைகளை அணிந்து சுற்றித்திரிந்த பெண் தொடர்பிலான விபரங்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன், குறித்த பெண்ணைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியது.

குறிப்பிட்ட சமூக இணையத்தளம் ஒன்றின் படி, கந்தானைப் பொலிஸாரிடம் இருந்து குறித்த பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் ஒரு ரஷ்ய நாட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அவர் தியானத்தில் ஈடுபட்டதாகவும், இலங்கைக்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளதாக கந்தானை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண் எந்தவிதமான மனநோயினாலும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கந்தானை பொலிஸார், தியான உடையில் இருந்த குறித்த பெண் கந்தானையில் சுதந்திரமாக நடமாடிய போது, பல்வேறு காணொளி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...