follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉலகம்ட்ரம்பிற்கு மூவாயிரம் கோடி அபராதம்

ட்ரம்பிற்கு மூவாயிரம் கோடி அபராதம்

Published on

தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 35.5 கோடி டாலர் அபராதம் விதித்து நியூ யார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் காரணமாக டிரம்ப் குடும்பத்தினர் நடத்திவரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது.

டிரம்ப்க்கு அபராதம் 35.5 கோடி டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால் அவர் மேலும் அதிகமாக – ஏறத்தாழ 45 கோடி டாலர் வரை – தொகை செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் டிரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் இரண்டு ஆண்டுகளுக்கு இதேபோன்ற தடைகளைப் பெற்றுள்ளனர்.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள்...

துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை அடுத்த ஆண்டு முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

நேபாள பிரதமர் இராஜினாமா

நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் பிரசந்தா...