follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தியின் நால்வர் அரசுடன்..

ஐக்கிய மக்கள் சக்தியின் நால்வர் அரசுடன்..

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள்.

கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பொதுக்கூட்டங்களிலும் போராட்டங்களிலும் அதிகம் பங்கேற்காதவர்களும் இவர்களே.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளதாகவும், இதன்போது இந்தக் குழுவும் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் குறித்து சஜித் கேள்வி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக...

யுக்ரைனில் போருக்காக சென்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ரஷ்யா மற்றும் யுக்ரைனில் போருக்காக சென்றுள்ள இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் இன்று(14) கொழும்பில் உள்ள...

ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.103,283

பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர்...