ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள்.
கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பொதுக்கூட்டங்களிலும் போராட்டங்களிலும் அதிகம் பங்கேற்காதவர்களும் இவர்களே.
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளதாகவும், இதன்போது இந்தக் குழுவும் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.