இரவு இரவாக டயானாவின் வீட்டில் பொன்சேகா யாரை சந்திக்கிறார்?

1256

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இரகசியமாக ‘ஜனாதிபதியுடன்’ கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டுகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் உள்பிரச்சினைகளை உள்ளுக்குள்ளேயே தீர்க்க வேண்டும் என்றார்.

“..சரத் பொன்சேகாவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என வழக்குத் தொடரப் போவதாகவும் எனக்குச் செய்தி கிடைத்தது. வழக்கு தொடரப்போனால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துட்டு செல்லுங்கள்..”

“டயானா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இரவு இரவாக சரத் பொன்சேகா சந்தித்து வருவதாக நான் நேற்று ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன்… டயானா கமகேயின் கணவர் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர்…”

“இதெல்லாம் நல்லமில்லை, துரோகம்.. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்க வேண்டும். ரணிலுடன் இருந்தால் டாடா பாய் என செல்ல வேண்டும்.. கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். நமக்கும் உண்டு. அதற்காக வெளியே போய் ஹீரோவா கத்த வேண்டிய எந்த தேவையும் இல்லை.. “

‘சரத் பொன்சேகா’ தொடர்பான இந்த நெருக்கடி சில தினங்களுக்கு முன் எழுந்தது, ஐக்கிய மக்கள் சக்திக்கு ‘தயா கமகே’ வந்தது ‘சரத் பொன்சேகா’விற்கு பிடிக்கவில்லை.

‘பொன்சேகா’வை உடனடியாக நீக்க வேண்டும் என அக்கட்சியின் ‘மூத்தவர்கள்’ பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here