follow the truth

follow the truth

May, 19, 2024
Homeவணிகம்சகல கடன் மறுசீரமைப்புக்களும் ஜூனில் நிறைவு

சகல கடன் மறுசீரமைப்புக்களும் ஜூனில் நிறைவு

Published on

கடன் மறுசீரமைப்பே, நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்ட பாரிய பொருளாதார சவாலாக உள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதமளவில் சகல கடன் மறுசீரமைப்புக்களும் முழுமையாக நிறைவுசெய்யப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் மாதமளவில் அனைத்து கடன் மறுசீரமைப்பையும் முழுமையாக நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்காகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, வெளிநாட்டுக் கடன் பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன் என இரண்டு பிரிவாக இக்கடன் மறுசீரமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், பல்தரப்பு கடனை தொடர்ச்சியாக செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இரு தரப்பு வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாத்தியமான வகையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடுகளுக்கிடையிலான கடன் தொடர்பில் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் நிறைவில் பூர்த்தியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திறமையுடனான பிணைமுறி தொடர்பிலான பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதமளவிலும் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதமளவிலும் முழுமையாக நிறைவுசெய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...