சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை(22) தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளதாக தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆபத்துமிக்க நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் அண்மைய திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாறு ஒளிரவிடப்படவுள்ளது.