follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுஹபரணை - தம்புள்ளை வீதியில் காட்டு யானைக்கு அருகில் செல்ல வேண்டாம்

ஹபரணை – தம்புள்ளை வீதியில் காட்டு யானைக்கு அருகில் செல்ல வேண்டாம்

Published on

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் காட்டு யானைகள் அருகில் செல்வது, ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஹபரணை வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றித் திரியும் போது காட்டு யானைக்கு அருகில் சென்று பல சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் இருந்ததை ஒரு கேமரா மூலம் பதிவாகியுள்ளது.

வீதியின் அருகே வரும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் காரணமாக குறித்த வீதியில் தினமும் காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன.

இதன்போது முச்சக்கர வண்டியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி காட்டு யானையின் அருகில் சென்று சுற்றுலா பயணி ஒருவருக்கு புகைப்படம் கொடுக்க ஏற்பாடு செய்தமை தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.

காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...