இந்த நாட்களில் மின் தேவையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளாந்த மின்சார தேவை 47 கிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 23ம் தேதி வரை 50% ஆக இருந்த நீர்மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மின்சார உற்பத்தி தற்போது 30% முதல் 35% வரை குறைந்துள்ளதாக மின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் நந்தன உதய குமார தெரிவித்தார். .
இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்தார்.