follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நானும் இப்போ ஒரு குழந்தைக்கு தந்தை

நானும் இப்போ ஒரு குழந்தைக்கு தந்தை

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தனது மகளுக்கு தடுப்பூசி போடச் சென்ற போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

வைத்தியர் ஒருவர் தனது மகளுக்கு தடுப்பூசியை பரிந்துரைத்ததாகவும், இது தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே பெறக்கூடிய தடுப்பூசி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி தேவைப்படுகின்ற போதிலும், அதிக விலை காரணமாக அரச வைத்தியசாலைகள் தடுப்பூசியை வழங்குவதில்லை என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்கும் அதே அக்கறையை அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...