தொண்டமான்களை கிழித்து தொங்க விட்ட சீலரதன தேரர்

1180

அநுர குமார திஸாநாயக்க தனது கனவில் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி விட்டார் என ஜனசத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நேற்று (24) வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சீலரதன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. பெருந்தோட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களும், சபை உறுப்பினர்களும் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை, ஆறுமுகன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களிடம் மாதாந்தம் 350 ரூபா சமூகப் பங்களிப்பை பெற்றுக் கொண்டார், தற்போது அவரது மகனும் பெற்றுக் கொள்கின்றார்.

அப்படிப்பட்ட சமூகப் பணத்தை எடுத்துக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுப்பதில்லை, அந்தப் பணத்தில் தொண்டமான்கள் சுகம் அனுபவிக்கிறார்கள். தோட்டத் தொழிலாளிக்கு 20 கிலோ தேயிலை தூள் பறித்தால்தான் ஆயிரம் ரூபாய் கிடைக்கும், பிறகு எப்படி இவர்கள் வாழ்வது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எவரும் பேசவில்லை. சிங்கள, தமிழ் அமைச்சர்கள் யாரும் தோட்டத்தில் வேலை செய்யவில்லை, அவர்கள் குடும்பத்திற்காக உழைத்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியது மகிழ்ச்சியாக உள்ளாரா? தற்போது தனது மகனை கோவில்களுக்கு அனுப்பி தேர்தலில் முன்னிறுத்த முயல்கிறார்.

ராஜபக்ஷ குடும்பம் இந்த நாட்டை அழித்தது, ரணில் நாட்டை ஏலம் விடுகிறார், தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்ய முயற்சிக்கிறார்.

ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இழக்கமாட்டார்கள் ஏனெனில் அதனை இழந்தால் தோற்றுப்போவார்கள். அநுர குமார திஸாநாயக்க தற்போது தனது கனவின் ஜனாதிபதியாகி விட்டார். இப்போது அவர்களுக்கு முதலாளிகள் வேண்டும், ஏழை மக்களின் பிரச்சினைகளை காட்டுவதில்லை, மக்களுக்காக குரல் எழுப்பிய தேசிய மக்கள் சக்தி இப்போது ஏன் ஏழை மக்களுக்காக குரல் எழுப்பவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அநுரவை முடிச்சு போட்டார், ரணில் அநுரவை இந்தியாவுக்கு ஓடிப்போய் அதானியுடன் பேசச் சொன்னார், இப்போது அதானி நலமாக இருக்கிறார்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here