ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக வெற்றிடமான உறுப்பினர் பதவிக்கு கட்சி உறுப்பினர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.சீ.முதுகுமாரன தகுதி பெற்றுள்ளார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், உத்திக பிரேமரத்ன அந்த மாவட்டத்திலிருந்து மூன்றாவது நபரானார்.
ஒரு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் வாக்குகளைப் பெற்ற உத்திக பிரேமரத்ன முதலாம் இடத்தை விட 5,000 வாக்குகள் வித்தியாசத்திலும் இரண்டாம் இடத்தை விட நூற்றுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் இளம் தலைவராக செயற்படுவதற்கு தனக்கு ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தனது இராஜினாமா கடிதத்தில் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.