follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஅதிகளவு குழந்தைகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிப்பு

அதிகளவு குழந்தைகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிப்பு

Published on

கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவுவதால், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

எனவே, குழந்தைகளுக்கு வெப்பம் தொடர்பான நோய் வராமல் தடுக்க போதுமான கனிமச்சத்துக்களுடன் கூடிய திரவங்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று மருத்துவர் கேட்டுக்கொண்டார்
தற்போதைய வெப்பமான காலநிலையின் போது நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர்.

“போதுமான திரவங்கள் மற்றும் தாதுப்பொருட்களை எடுத்துக் கொள்ளத் தவறினால், சோர்வு, தலைவலி, தூக்கம், வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை, மற்றும் பசியின்மை போன்ற முக்கியமான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படலாம்” என்று டாக்டர் பெரேரா கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...