அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அபிவிருத்தி (SFD) மதிப்பீட்டுப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (27) இலங்கை வந்தடைந்தது.
75 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இலங்கை சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கால்-கை வலிப்பு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் திட்டத்தின் செயலாக்கத்திற்கான மதிப்பீட்டை நடத்துதல் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்திற்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் 32 மில்லியன் டொலர்கள் ஆதரவு வழங்கப்பட்டது.
2017 டிசம்பரில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக இலங்கை மக்களிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.