ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை 02 தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திரா தெரிவித்தார்.
இரண்டு ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்கள் கூட்டாக அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.
அந்நிறுவனங்களின் நிர்வாகத்துடன் பல தடவைகள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்கள் பலனளித்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
இதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து இலாபத்தில் ஒரு பகுதியை இலங்கை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.