மின்சாரம் தொடர்பில் இந்தியா – இலங்கை கலந்துரையாடல்

157

இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் மற்றும் இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா ஆகியோர் தலைமையில் இந்திய மின் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவுடன் திட்டமிடப்பட்ட மின் அமைப்பு ஒருங்கிணைப்புத் திட்டம், 130 மெகாவாட் சம்பூர் மின் திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று தீவுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்மயமாக்கல் திட்டம் மற்றும் இந்திய முதலீட்டில் செயல்படுத்தப்படும் பிற புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை, அத்துடன் அதன் தற்போதைய முன்னேற்றம் மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here