follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடு2024ம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை

2024ம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை

Published on

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல் தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மே 3 ஆம் திகதி வரையிலும், மூன்றாம் கட்டம் மே 20 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.

பாடசாலைகளின் இரண்டாவது தவணை ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறுவதோடு, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு 2025 ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகும்.

2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முடிவடையும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...