follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகாலி சிறையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு

காலி சிறையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு

Published on

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் மூளைக் காய்ச்சல் நோயாளிகள் வேறு யாரும் சிறைச்சாலையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல் நிலைமை காரணமாக இதற்கு முன்னரும் காலி சிறைச்சாலை கைதியொருவரும் மாத்தறை சிறைச்சாலை கைதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...