follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP2"இன்னும் ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்க முடியாது.."

“இன்னும் ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்க முடியாது..”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித், அநுர வெற்றி பெறுவார்களா என்று கூறமுடியாது, இவர்கள் கேட்பார்களா என்றும் கூறமுடியாது. இதை ஓகஸ்ட் மாதம்தான் அறியமுடியும் என திகாம்பரம் தெரிவிக்கிறார்.

தொழிலாளர் சங்கத்தின் இவ்வருட மேதினப் பேரணியை நடத்துவது தொடர்பாக ஹட்டன் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற தொழிற்சங்க அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திகாம்பரம் மேலும் தெரிவித்திருந்தார்.

“.. தொழிலாளர் தேசிய சங்கமாகிய நாங்கள் இந்த வருடம் மாத்திரம் மே பேரணியை நடத்துவோம், இந்த ஆண்டு மே பேரணியை கூட்டணியாக நடத்த மாட்டோம், ஏனெனில் இந்த மே பேரணியில் எமது பலத்தை முழுமையாக வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வருபவர்களுடன் ஒன்றிணைய வேண்டும்.
இல்லையெனில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு முறையாக சேவை செய்ய முடியாது.

நான் அமைச்சராக இருந்த போது தோட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தேன், அப்போது 07 பேர்ச் காணி போதாது என சிலர் அறிவித்து ஆட்சிக்கு வந்ததும் 10 பேர்ச்சஸ் காணியில் வீடு கட்டி தருவதாக அறிவித்தார்கள் ஆனால் அது நடந்ததா?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமாக, பறிக்கும் தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு நூறு ரூபாவை வழங்க விரும்புகின்றேன், இதன் மூலம் இவர்கள் பறிக்கும் தேயிலைக்கு அதிகமான கூலி கிடைக்கும்.

இன்றைக்கு தோட்டங்களில் வேலை செய்யாதவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளது. வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைப்பது தெரிந்ததே.

மேலும், இந்த பேரணியை சரியான விழிப்புணர்வுடன் நடத்த வேண்டும், மேலும் இந்த மே பேரணிக்கு மக்களை சேகரிக்கும் போது இந்த ஏற்பாட்டாளர்கள் தோட்ட மக்களுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் இதை வெற்றிகரமாக செய்ய முடியாது. அதேபோல் இந்த அமைப்பாளர்கள் 10 அல்லது அதற்கும் குறைவாக கொண்டு வந்தால் எங்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள் நீங்கள் தான் ஏமாறுவீர்கள். என் குழந்தைகளையும் குடும்ப உறுப்பினர்களையும் அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...