இலங்கையை கலிபோர்னியாவாக மாற்ற முடியுமா என்பதே தமது கட்சிக்கு சவாலாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவருக்கு கீழ் இலங்கை கலிபோர்னியாவாக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான கொள்கைகளை தமது கட்சி ஏற்கனவே வைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஐக்கிய இளைஞர் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குருநாகல் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.