கொஹுவல சந்தியில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குவான்வர்தன தெரிவித்துள்ளார்.
300 மீட்டர் நீளமும், 9.2 மீட்டர் அகலமும் கொண்ட குறித்த மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பமானது.
2021 இல் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார்.